Headlines News :
Home » » ஆபாச படங்களை இணையத்தளத்தில் வெளியீடுவேன்: கல்லூரி மாணவிக்கு மிரட்டல்!

ஆபாச படங்களை இணையத்தளத்தில் வெளியீடுவேன்: கல்லூரி மாணவிக்கு மிரட்டல்!

Written By TamilDiscovery on Sunday, July 28, 2013 | 6:18 AM

சென்னை நுங்கம்பாக்கத்தில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

நுங்கம்பாக்கம் புதிய தெருவைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் சாமுவேல் (26). இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் சாமுவேலுக்கும், அந்த மாணவிக்கும் இடையே சில நாள்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அப்போது சாமுவேல், அந்த மாணவியை அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் தனக்கு பணம் தந்தால்தான் அந்த புகைப்படத்தை திருப்பி தருவேன் என்றும், இல்லையென்றால் இணையத்தளத்தில் வெளியீடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து அந்த மாணவி, நுங்கம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, சாமுவேலை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template