தர்மபுரி இளவரசனின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும் என, இளவரசனின் பெற்றோரும், வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி செல்லங் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த திவ்யாவை காதல் கலப்பு
திருமணம் செய்து கொண்ட நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன் கடந்த 4ஆம் திகதி
ரயில் தண்டவாளம் அருகே மர்மமான முறையில் இருந்து கிடந்தார்.
இளவரசன் எழுதிய தற்கொலை குறிப்பு கடிதம் என, சொல்லப்படுகிற ஒன்றை, யாரோ ஒருவர், தன்னிடம் ஒப்படைத்ததாகவும், அதிலுள்ள வாசகங்களின் அடிப்படையில் இளவரசனுடைய மரணம், தற்கொலை என முடிவு செய்ததாகவும் ஆகவே அது தற்கொலையே என கடந்த 7ம் திகதி, தர்மபுரி எஸ்.பி., ஆஸ்ராக் கர்க் கூறினார். தடயவியல் ஆய்வு, மற்ற ரசாயன ஆய்வு எதையும் செய்யாமல் அக்கடிதம் இளவரசனால் எழுதப்பட்டது என்பதை நிரூபிக்காமல் எஸ்.பி., அறிவித்தது விசாரணையின் மீது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அக்கடிதம், யாரால், எப்போது ஒப்படைக்கப்பட்டது என்பது குறித்து, எந்த தகவலும் இல்லை. அந்த கடிதத்தை ஒப்படைத்த நபருடைய பின்புலம் அவருடைய நடத்தை ஆகியவை குறித்து பொலிஸார் விசாரித்ததா இல்லையா என்பது என்பது பற்றி, எந்த தகவலும் இல்லை.
கடிதம், ஜூலை முதல் திகதிக்கு முன் எழுதப்பட்டதாக தெரிகிறது. முதல் பத்தியில் "முதல் திகதியில் வரவில்லை என்றால், நான் உலகத்தை விட்டு பிரிந்து விடுவேன்´ என்பதாக சொல்லப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பத்திகளில், திவ்யா வரவில்லை என்று, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டது போன்ற வாசகங்கள் உள்ளன.மேலும், கொலை செய்த நபர்களே, வழக்கை வேறு திசை திருப்புவதற்காக, கொலை செய்த பிறகு, கடிதத்தை வைத்து சென்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இளவரசனின் மரணத்தில், இது போன்ற, பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால், சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இரண்டு முறை இளவரசன் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, இளவரசன் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இளவரசன் தரப்பு வழக்கிறஞர் ரஜினிகாந்த், இளவசரன் உயிரிழப்பு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மறைந்தும் மறையாத மர்மங்கள்: இளவரசன் மரணத்தில் சிபிஐ விசாரணை கோரும் வழக்கறிஞர்!
Written By TamilDiscovery on Saturday, July 20, 2013 | 9:07 PM
Related articles
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
- அசிட் பருக்கி கொலை முயற்சி: 18 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- பாபுவின் ஆசிரமத்திற்குள் கருக்கலைப்பு நிலையம்!
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !