Headlines News :
Home » » போர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

போர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Written By TamilDiscovery on Sunday, June 30, 2013 | 10:01 AM

அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்கிடம் தெரிவித்துள்ளார்.

தன்சானியாவில் மலேசியப் பிரதமர் நஜீப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பொன்றின்போதே ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக த நியூ ஸ்ட்செய்ட் டைம்ஸ் பத்திரிகையை மேற்கோள் காட்டி கொழும்பு எக்ஸ்பிரஸ் செய்தி ஏடு தெரிவித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி சந்திப்பின்போது தனக்கு முறைப்படி அழைப்பு விடுத்ததாக பிரதமர் நஜீப் தெரிவித்தார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து அவசரப்பட்டு முடிவுகள் எதனையும் எடுக்காமல் இலங்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிய நியாயமான மதிப்பீடொன்றை ஏனைய நாடுகளும் மேற்கொள்ளுமென ஜனாதிபதி ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த வாரம் தொடங்கிய சர்வதேச உச்சி மாநாடொன்றுக்கென இரு நாட்டுத் தலைவர்களும் தன்சானியாவில் தங்கியிருந்தமை தெரிந்ததே.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template