Headlines News :
Home » » தாய் மற்றும், மகள் கழுத்து நெரித்து கொலை!

தாய் மற்றும், மகள் கழுத்து நெரித்து கொலை!

Written By TamilDiscovery on Friday, September 6, 2013 | 3:52 AM

வெல்லவாய - ஊவா குடாஓய பகுதியில் தாய் மற்றும் மகள் ஆகியோர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நேற்று முன்தினம் (04) அல்லது நேற்று (05) இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

85 வயதுடைய தாயும் 58 வயதுடைய மகளுமே வீட்டுக்குள் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் மொனராகலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று (06) பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.

சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template