Headlines News :
Home » » மன அழுத்தத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

மன அழுத்தத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

Written By TamilDiscovery on Saturday, August 3, 2013 | 11:04 PM

மன அழுத்தத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கக் கூடுமென சர்வதேச ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அங்கொட மனநல வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற உலக ஆசிய மனநல விசேட வைத்தியர்களின் நான்காவது மாநாட்டு ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபேதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்க தொடர்ந்து உரையாற்றகையிர்,

மனநல வைத்தியர்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய ஊழியர்களின் பற்றாக்குறையே மன அழுத்தத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம். மனநலம் குன்றிய நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதே தமது நோக்கமாகும். அத்துடன் இலங்கையில் வைத்தியர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template