Headlines News :
Home » » இலங்கையின் ஊழல் மிக்க அரச நிறுவனங்களில் முதலிடத்தில் பொலிஸ் திணைக்களம்!

இலங்கையின் ஊழல் மிக்க அரச நிறுவனங்களில் முதலிடத்தில் பொலிஸ் திணைக்களம்!

Written By TamilDiscovery on Sunday, July 14, 2013 | 12:12 AM

இலங்கையில் ஊழல் மிக்க அரச நிறுவனங்களில் பொலிஸ் திணைக்களம் முதலாவது இடத்தில் உள்ளதாக ட்ரான்ஸ் பேரன்ஸி சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பின் மூலமே இந்த தகவலை பெற முடிந்ததாக ட்ரான்ஸ் பேரன்ஸி சர்வதேச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:

இலங்கையில் கடந்த இரண்டு வருட காலங்களில் இலஞ்ச ஊழல் செயற்பாடுகள் பாரிய அளவு அதிகரித்துள்ளன. அதனடிப்படையில் பொலிஸ் திணைக்களத்துக்கு அடுத்தபடியாக நீதித்துறையும் மூன்றாம் இடத்தில் வருமானவரி அறவிடும் இறை வரித்திணைக்களமும் இருக்கின்றன.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் பொலிஸ் திணைக்களத்தில் உள்ளவர்களில் 43சதவீதமானவர்கள் இலஞ்ச ஊழல் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் அதேவேளை இலங்கையில் உள்ளவர்களில் 19 சதவீதமானவர்கள் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் ஏதேனும் ஒரு சேவையினை பெற்றுக்கொள்வதற்கு இலஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template